பிற்பகல் மூன்று மணி ஜெபம்.

சேசுவே நீர் மரித்தீர்.  உம் மரணத்திலிருந்து சீவியத்தின் சுனை ஆன்மாக்களுக்காகப் பொங்கிப் பாய்ந்தது.  உலகம் முழுவதற்கும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது.  ஓ சீவிய ஊற்றே! ஆழம் காண முடியாத கடவுளின் இரக்கமே, உலகம் முழுவதையும் உன்னுள் பொதிந்து உன்னையே எம்மீது பொழிந்து வெறுமையாகி விடுவாயாக. சேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாகப் பொங்கிப் பாய்ந்த இரத்தமே, தண்ணீரே! உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.