நற்படிப்புகளுக்கு பாதுகாவலாகிய தேவதாயின் ஜெபம்

உலகத்தின் நித்திய ஒளியும் எங்கள் இரட் சகருமாகிய சேசுநாதரைப் பெற்றெடுத்த மகா பரிசுத்த கன்னிகையே! அறிவீனமும் அந்தகாரமும் நிறைந்த மனதில் உமது பரிசுத்த மன்றாட்டினால், அறிவிலும் பக்தியிலும் ஆச்சரியத்துக்குரிய அபிவிர்த்தியை அநேகநேக முறை கொடுத்தருளிய தேவ ஞானத்தின் தாயே! அடியேன் தேவரீரை என்னை ஆதரிப்பவராகவும் என் படிப்புக்குப் பாதுகாவலாகவும் தெரிந்து கொள் கிறேன்.

ஓ பாக்கியம் பெற்ற ஆண்டவளே!  நற்படிப்புகளுக்குப் பாதுகாவலே! உமது மன்றாட்டுகளைக் கேட்டு திவ்விய இஸ்பிரீத்துசாந்து வானவர் எனக்குப் பூரண வெளிச்சத்தையும், பலத்தையும், விவேகத்தையும், தாழ்ச்சியையும் தந்தருள்வாராக. எனக்கு நேர்மையான மனதையும் போதுமான புத்தி, ஞாபகம், வல்லமைகளையும் அளித்து முக்கியமாய் நான் சகலத்திலும் தேவ ஞானத்தின் திருவுளப்படி நடப்பதற்கு வேண்டிய மன இருதயக் கீழ்ப்படிதலையும் கொடுத்தருள்வாராக.

என் நல்ல தாயே! ஆங்காரம், தற்பெருமை, வீண் வினோதப் பிரியம், யோசனையற்றதனம் இவைகளினின்று என்னைக் காப்பாற்றும். என் விசுவாசத்தையாவது ஆத்தும சமாதானத்தையாவது குறைக்கக் கூடிய எந்தக் காரியத்தினின்றும் தற்காத்து, சகல துர்மாதிரிகை, தப்பறைகளினின்று எங்களைப் பாதுகாத்தருளும்.

ஓ மரியாயே!  நான் உமது பாதுகாவலின் உதவியால், தாயாகிய பரிசுத்த திருச்சபையின் போதனைக்கும் நடத்துதலுக்கும் எப்போதும் கீழ்ப்படிந்து, சத்திய நெறியிலும் தவறாமல் தைரியத் தோடும் விடாமுயற்சியோடும் நடந்து கடைசி யாய் உமது திருக்குமாரனும் எங்கள் ஆண்டவரு மான சேசுக்கிறீஸ்துநாதரை அறிந்து நேசித்து எக்காலமும் அடைந்து சுகித்திருக்கும்படி கிருபை செய்தருளும்.  

ஆமென்.

(100 நாள் பலன்)