சகல சம்மனசுக்களையும் அர்ச்சிஷ்டவர்களையும் நோக்கி ஜெபம்.

தூதர்களே, அதிதூதர்களே, பத்திராசனர்களே, நாதகிருத்தியர்களே, ஞானாதிக்கர்களே, பிராதமிகர்களே, சத்துவகர்களே, பத்திச்சுவாலகர்களே, பலவத்தர்களே, சர்வேசுரனுடைய சகல அர்ச்சிஷ்டவர்களே, ஸ்திரீ பூமான்களாகிய சகல பரிசுத்தர்களே, விசேஷமாக என் பாதுகாவலர்களாகிய அர்ச்சிஷ்டவர்களே, அடியேன் சர்வ வல்லவராகிய சர்வேசுரனுடைய புகழ்ச்சிக்காகவும் மகிமைக்காகவும், என் சொந்த நன்மைக்காகவும், அவருடைய பரிசுத்த திருச்சபைகாகவும் இந்த உன்னதமான பலியை அவருக்கு ஒப்புக்கொடுக்கத் தகுதியுள்ளவனாகும்படியக, எனக்காகப் பரிந்து பேசத்தயை செய்வீர்களாக.

ஆமென்.