விசுவாச மந்திரம்

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுக்கிறிஸ்துவை விசுவசிக்கிறேன்.

இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

பாதாளங்களில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.

இஸ்பிரீத்து சாந்துவை விசுவசிக்கிறேன்.

பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.

அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.

பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.

ஆமென்.