அருள் நிறைந்த மந்திரம்

அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!

அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.