காவல் சம்மனசை நோக்கி செபம்.

அதிமிக பிரமாண்டம் கொண்ட காவலரே! எனக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்து என்னை ஆண்டு வழி நடத்தி வரும் வான தூதரே! இன்று நான் உம்மை என் பாதுகாவலராகவும், அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு, என்றென்றைக்கும் என்னை முழுவதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் "உமது மகிமை பெருமைக்கு விரோதமான எவ்வித சொல்லினாலும், செயலினாலும் உம்மை விட்டுப் பிரிய மாட்டேன். மற்றவர்களும் உமக்கு எதிராக ஏதாவது சொல்லவும், செய்யவும் விட மாட்டேன்." என்று உறுதி கூறுகிறேன். ஆதலால் இன்று முதல் என் வாழ்நாள் எல்லாம் ஊழியராக என்னை ஏற்றுக் கொள்ளும்! என் ஒவ்வொரு செயலிலும் எனக்கு உதவியாக இருந்து  என்னைக் கைவிடாமல் காத்தருளும்!

ஆமென்!