குழந்தை இயேசுவுக்கு செபம் 3.

ஒன்பது மாதம் கன்னிமாதாவின் உதிரத்தில் அடைப்பட்டு அர்ச். கன்னிமரியாயினாலும் அர்ச். சூசையப்பராலும் அத்தியந்த ஆவலோடு ஆசிக்கப்பட்டு உலக இரட்சண்ணியத்துக்காகப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மிகுந்த மதுரமுள்ள திவ்விய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே; உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.