11. குரு அமைதியிலே சற்று நேரம் ஒரு சின்ன ஜெபம் ஜெபிக்கிற போது


சேசுநாதர் தம்முடைய சீஷர்களோடுகூடப் பூங்காவனத்தில் பிரவேசித்து, நம் நிமித்தமாகக் கடினமான துக்கங்களை அனுபவித்தாரென்றும், நாம் அனுபவிக்கிற மனோவியாகுல முதலான துக்க துயரங்களை மனிதர் பாவங்களுக்குரிய கொடிதான ஆக்கினைக்கு உத்தரிப்பாக ஒப்புக் கொடுத்தாரென்றும், தாம் அனுபவிக்கப் போகிற மகா கொடிதான வேதனைகளை மாற்ற வேணுமானாலும், மாற்றாமலிருக்க வேணுமானாலும், பிதாவே உம்முடைய சித்தம், என் மனதின்படி வேண்டாமென்று வேண்டிக் கொண்டாரென்று நினைத்துக் கொள்.

சுவாமி, எங்களுக்குக் கஸ்தி துக்கம் வரும்போது நாங்கள் அதிகமதிகமாய்ச் செபம் பண்ணவும், எங்கள் சத்துருக்கள் கையில் அகப்பட்டு, நாங்கள் மோசம் போகாமலிருக்கவும் கிருபை பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.

ஆமென்.