2. குரு ஒரு சிறிய வஸ்திரத்தைத் தமது சிரசின் மீது போடும்போது (Amice அமீஸ்).


சுவாமியுடைய திருமுகத்திலே யூதர்கள் வஸ்திரத்தைக் கட்டி அடித்து, உன்னை அடித்தவன் யாரென்று கேட்டார்களென்று சிந்தித்துக்கொள்.

சுவாமி! நாங்கள் இந்த உலகத்தின் வெகுமானத்தைப் பாராமல், பரலோகத்திலே தேவரீர் உம்முடையவர்களுக்குத் தருகிற வெகுமானத்தைப் பாராட்ட எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேணுமென்று அநாதி பிதாவை வேண்டிக் கொள்கிறோம்.

ஆமென் சேசு.