வாழ்க்கைத் துணைக்காக செபம்.

ஓ என் இயேசுவே, என் அன்பு சிநேகிதரே! எனது முழு நம்பிக்கையுடன் என் மனம் திறந்து, எனது எதிர்காலத்திற்காக உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன்.

எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய, உங்களின் அருளையும் ஆசிரையும் என்மேல் பொழிந்தருளும். எனக்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கை துணையை எனக்கு அனுப்பியருளும்.

என் அன்பு சினேகிதரே, என் வாழ்க்கை துணையாய் வருபவர் தங்களின் திரு இருதயத்தின் மேல் பற்றும் பக்தியும் உள்ளவராக இருக்க மன்றாடுகிறேன்.

ஆமென்.