உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறீஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறீஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்சியசிஷ்ட மரியாயே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும் .

சர்வேசுரனுடைய அர்சியசிஷ்ட மாதாவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சியசிஷ்ட கன்னிகையே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நவவிலாச சபையாயிருக்கிற சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட ஸ்நாபக அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட சூசையப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட இராயப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட சின்னப்பரே,  மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட முடியப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட லவுரேஞ்சியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட கிரகோரியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட அமிர்தநாதரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட அகுஸ்தீனே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட எரோணிமுவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

மேற்றிராணிமார்களும், ஸ்துதியர்களுமாகிய அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

வேத வித்யாபாரகரான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

குருக்களும், ஆசிரியர்களுமான அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

சந்நியாசிகளும் தபோதனர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட மரிய மதலேனே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட கத்தரீனாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட பார்பரம்மாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளும், விதவைகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

தயாபரராயிருந்து அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

சகல பொல்லாப்புகளிலே நின்று,  அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

உமது கோபத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

உமது நீதி அகோரத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

பசாசின் வல்லமையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

கடூர வியாகுலத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

கொடிய ஆக்கினையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

அக்கினிச் சுவாலையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

துயரமான அழுகையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு மனுஷாவதாரத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீர் கட்டுண்ட கட்டுகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திருச்சிலுவையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

எங்கள் மரணத்தை ஜெயித்தழித்த தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப்  பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேற்றரவு பண்ணுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

நடுத்தீர்க்கிற நாளிலே, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவியாயிருந்த மக்தலேன் அம்மாளுக்கு பாவமன்னிப்புத் தந்தவரும், நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்தின் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும் கைக்கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

இரட்சனியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் சகோதரர், பந்துக்கள், உபகாரிகளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயவு செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிறீஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமுமுள்ள இடத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் துயரைச் சந்தோஷமாக மாற்றியருளத் தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்களுடைய ஆசை நிறைவேறத் தயைபுரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் உம்மைப் புகழ்ந்து, ஸ்துதி பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உம்முடைய அர்ச்சியசிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிருபையின் ஊறனியே தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.

சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.

1 பரலோக மந்திரம்.

நரக வாசலில் நின்று, அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும் .
சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக, அப்படியே ஆகக்கடவது.

சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் அபயசத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

ஆமென்.