சம்மனசுகளின் கீதம்


உன்னதங்களிலே (சிரம் வணங்கி) சர்வேசுரனுக்கு மகிமையும், பூலோகத்தில் நல்ல மனதுள்ள மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாவதாக. நாங்கள் உம்மைப் புகழ்கிறோம். உம்மை வாழ்த்துகிறோம், (சிரம் வணங்கி) உம்மை ஆராதிக்கிறோம், உம்மை மகிமைப்படுத்துகிறோம்.

உமது மேலான மகிமையினிமித்தம் (சிரம் வணங்கி) உமக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துகிறோம்).தேவனாகிய ஆண்டவரே, பரலோக இராசாவே, சர்வ வல்லபரான பிதாவாகிய சர்வேசுரா, ஏக குமரானாய் பிறந்து சுதானாகிய ஆண்டவரே, (சிரம் வணங்கி) சேசு கிறிஸ்துவே, தேவனாகிய ஆண்டவரே, சர்வேசுரனுடைய செம்மறிப் பருவையே, பிதாவின் குமாரனே, உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, (சிரம் வணங்கி) எங்கள் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும். பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஏனெனில் நீர் ஒருவர் மாத்திரமே பரிசுத்தர். நீர் ஒருவர் மாத்திரமே ஆண்டவர். நீர் ஒருவர் மாத்திரமே மகா உன்னதமானவர். (சிரம் வணங்கி) சேசுக் கிறீஸ்துவே, (சிலுவை அடையாளம் வரைந்து) இஸ்பிரீத்துசாந்துவோடு பிதாவாகிய சர்வேசுரனின் மகிமையில் வீற்றிருக்கிறீர்.

ஆமென்.