திவ்ய நற்கருணைக்கு ஆராதனை.

நித்திய ஸ்துதிக்குரிய  பரிசுத்த நற்கருணைக்கு,
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்.

அன்பின் அவதாரமே, துன்புறும் சிநேகிதமே,
வந்தோம் உந்தன் பாதமே, எம்மை நாளும் ஆளுமே.

இடைவிடாமல் துதிக்கப்பட யோக்கியமுமாய், மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம திவ்விய நற்கருணைக்கே அனவரத காலமும் முடியாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.

ஆமென்.