தாயே உன் பாதமே நாடினோம் தஞ்சம் எனக் கூடினோம்

தாயே உன் பாதமே நாடினோம் தஞ்சம் எனக் கூடினோம்
நீயே கதியென வாயார வாழ்த்தினோம்
நெஞ்சில் உறை அன்னையே

1. பிணியால் வருந்தும் துயர் நீங்கவே
தினம் கோடிப் பேர்கள் உனை நாடுவார்
கனிவோடு நீ வந்து மகிழ்வோடு துணை செய்வாய்
கருணாகரி நீயே மரியன்னையே

2. கவலைகளினால் வாடுவோர்
கண்ணீர் துடைத்தருளே
பாவவினை நீக்கி ஜெபதபம் ஓங்கி
பாங்குடன் வாழச் செய்வாயே