இணையில்லா இறைவனின் திருப்புகழை ***

இணையில்லா இறைவனின் திருப்புகழை
அனைவரும் இணைந்தே பாடிடுவோம்

1. அருள் நிறை ஆயன் அக்களித்து
ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து
பரம்பொருள் அவன் பாதம் தனையே - நாம்
பரிவுடன் போற்றி வாழ்ந்திடுவோம்

2. வானுற உயர்ந்த மலைகளுமே
வண்ண எழில்நிறை மலர்களுமே
உனைத் தேடும் சின்ன உயிர்களுமே - நிதம்
உன்னத இறைவனை வாழ்த்திடுமே