இயேசு எனக்கு அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார் ***

இயேசு எனக்கு அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார்

1. கடவுள் நம் அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார்
நெருக்கடி நேரத்தில் நமக்கு
உறுதுணையென நன்கு காட்டியுள்ளார்
ஆகவே வையகமே புரண்டாலும்
நாம் அசைய மாட்டோம்
மலைகள் கடல் நடுவிலே விழுந்தாலும் அச்சம் இல்லை

2. கடல் அலைகள் கொந்தளித்து எழுந்தாலும்
அவற்றில் கொந்தளிப்பால் மலைகள் தடுமாறினாலும்
வான்படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்
யாக்கோபின் இறைவன் நமக்கு அரணாய் உள்ளார்