மரியென்னும் நாமம் அழகு நாமம்

மரியென்னும் நாமம் அழகு நாமம்
மங்காத நாமம் திருநாமம் ஆவே மரியா

1. அடிமை என்பதும் இவளன்றோ
அற்புதத் தாயும் இவளன்றோ
இறைவனின் தாயாய் இவளிருக்க
அழுதிட இவள் நம்மை விடுவாளோ

2. பகையும் வன்மையும் மறைந்திடவே
ஒற்றுமை எங்களில் நிறைந்திடவே
எல்லாரும் உம் அருள் பெற்றிடவே
எந்நாளும் அருள்வாய் தாய்மரியே