கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே

கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே
காத்திடுவாய் தாயே - எங்களை

1. மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மனஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

2. தாயெனவே தாவி வந்தோம்
சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி
கூவிடும் குரல் கேளாய்