அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் ***

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம்
அல்லல்கள் அகன்று விடும் - அவள்
கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்
கவலைகள் மறைந்து விடும்

1. வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்
தூய்மை தான் அவள் தோற்றம் - இன்று
தேடா மானிடர் யாருளர் தரணியில்
பாடார் அவள் ஏற்றம்

2. பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்
பொலிவால் திகழ்ந்தோங்கும் - இன்று
செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை
எடுத்தே அரவணைக்கும்