நற்கருணைப் பேழை எரியாத புதுமை!

புனித சின்னப்பருக்கு தாமிரபரணி பாயும் கரையோரம் கற்பகவிருட்சங்கள் செழித்தோங்கி நிற்கும் சிங்கம்பாறை என்ற ஊரில் சிறிய ஒலைக்கோயில் ஒன்று 250 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.சிலுவையை நினைவில் கொண்டு சிலுவை வடிவில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. தண்ணீருக்கு பதிலாக பதனீரை பயன்படுத்தி இந்த ஆலயம் கட்டப்பட்டது.

சிங்கம்பாறை புனித சின்னப்ப ஆலயப் பணிகள் 1911ல் ஆரம்பிக்கப்பட்டு திருச்சியிலிருந்து வந்த அருட்தந்தை அவர்கள் கோவில் என்றால் அது சிலுவை வடிவத்தில் இருக்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் கோவிலின் இருபக்கங்கள் இடிக்கப்பட்டு சிலுவை கட்டப்பட்டது. 1928ல் ஆலயம் வேலை முடிவு பெற்று திறக்கப்பட்டது. Fr.அருளப்பர் காலத்தில் சிலுவை கோவில் விரிவுப்படுத்தபட்டது

1949ல் சிங்கம்பாறை கோவில் தீப்பிடித்து எரிந்த போது சுருபம் மற்றும் கோவில் பொருள்கள் எல்லம் எரிந்து விட்டது. ஆனல் நற்கருணை பேழை மட்டும் எரியவில்லை. அப்போது பங்கு தந்தையாக இருந்தவர் வலண்டின் டயஸ் அவர்கள். ஆனால் கோவிலை மறுசீர் அமைப்பு செய்தது முன்னாள் பங்கு தந்தை R.விசுவாசம் ஆவார்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சோமனாதபேரி இருந்து செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பிறகத்தோலிக்க சமூகம் மாற்றப்படுகிறது. கத்தோலிக்க சமூக மக்கள் முக்கூடல் அருகில் மைலபுரம் குடியேறினர். இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட்டதால் சிங்கபாறை உருவாக்கப்பட்ட வழி வகுத்தன.

சோமனாதபேரி கத்தோலிக்கர்கள் ஒரு முஸ்லீம் மனை இருந்து மைலபுரம் வடக்கு மற்றும் பங்குதந்தை உதவியுடன் அங்கு குடியேறினர்.  பால் நாதர், வருகையால் அது சிங்கம்பாறை என்று பெயரிடப்பட்டது. ஒரு சிறிய அறையானது இங்கே கட்டப்பட்டது. மற்றும் செயின்ட் பால் சிலை அங்கு நிறுவப்பட்டது, இது மைலபுரத்தி உள்ள செயின்ட் பீட்டர் மற்றும் பால் திருச்சபை நீக்கப்பட்டது.

1901 சிங்கபாறை கோவில் 1894 ல் ஒரு தலைப்பில் கூரைகொண்ட விரிவான இருந்த காலத்தில் சே ந்தமரம் பங்கின் அதிகார வரம்பின் கீழ் இருந்தது. பின்னர் அது வீரவ நல்லூர் பங்குடன் சேர்க்கப்பட்டது. கேப்ரியல்1991 இல் தற்போதைய சர்ச் அடித்தளம் போடப்பட்டது. சர்ச் கட்டுமான பணி 1929 ல் முடிக்கப்பட்டது.

புனித சின்னப்பரும், புனித ராயப்பரும் இணைந்த நிலையில் அமைந்த ஆலயங்களைத் தான் பெரும்பாலும் காணமுடியும். புனித சின்னப்பருக்கு என்று தனியாக அமைந்த சில ஆலயங்களுள் இந்த ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

7 குடும்பமாக இரு ந்து ஊர் உருவாக்கப்பட்டது. இன்று புனித சின்னப்பர் ஆசிர்வாதத்தால் 1100 குடும்பங்கள் வளர் ந்து உள்லது. இந்த ஊரின் முதல் குருவாக புதுமை அடிகளார் 1939ல் குருபட்டம் பெற்றார். இரண்டாவதாக ஜான்சன், பின் ஜேம்ஸ், புதுமை வளன், சார்லஸ், ஆரோக்கியராஜ ஆகியோர்கள் குருபட்டம் பெற்று உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் திருத்தல் திருவிழா ஜனவரி 16ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக 25ம் தேதி நிறைவடையும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.