அர்ச். வியாகுலமாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஷ்ட கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உபாதனையடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாகுல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கண்ணீர் சொரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துயரமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கைவிடப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆறுதலற்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குமாரனை இழந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சஞ்சலத்தில் அமிழ்ந்திய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இருதயத்தினுள் சிலுவையையூன்றின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா துக்கமுள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கண்ணீர்ச் சுனையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாடுகளின் திரளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொறுமையின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உறுதி நிலைமையின் குன்றே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நம்பிக்கையின் பெட்டகமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கைவிடப்பட்டோர்களுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உபத்திரவப்படுகிறவர்களுக்கு கேடயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவிசுவாசிகளின் ஜெயசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நிர்ப்பாக்கியர்களுக்கு ஆதரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதியஸ்தர்களுக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மெலிந்தவர்களுக்குத் திடனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

யாத்திரையில் அவதிப்படுகிறவர்களுக்குத் துறைமுகமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பெரும்புயலைத் தணித்தவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்பப்படுகிறவர்களுக்குத் தஞ்சமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துஷ்டர்களுக்கு அச்சமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விசுவாசிகளின் பொக்கிஷமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீர்க்கத்தரிசிகளின் நேத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலர்களின் உதவியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளின் கிரீடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்துதியர்களின் ஒளியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளின் ஆரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கைம்பெண்களின் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சுவாமி தேவரீர் சிமியோன் தீர்க்கத்தரிசனம் சொன்னபடியே பாடுபட்ட பொழுது மகிமைப் பிரதாபமுள்ள கன்னித் தாயாரான மரியாயின் மகா மதுரமான ஆத்துமம் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டதாமே.  அவர்களின் வியாகுலத் தையும் வேதனையையும் வணங்கி ஆராதிக்கிற நாங்கள் அவருடைய சிலுவையைச் சுமுத்திரை யாய் நேசித்த சகல அர்ச்சியசிஷ்டவர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும் மன்றாட்டுக்களி னாலும் உமது திருப்பாடுகளின் பலனை அடையும்படி தயை புரிந்தருளும். ஆமென்.

1 பர. 1 அருள். 1 திரி.