தீர்த்தத்தைத் தொட்டு சிலுவை வரைகிற போது

சர்வேசுரா சுவாமி!  இந்த தீர்த்தத்தின் முயற்சியால் உம்முடைய திருக்குமாரனாகிய சேசுகிறீஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு என் ஆத்துமத்தைக் கழுவி, என் பாவங்களைப் பொறுத்து, பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் விலக்கி உம்முடைய ஆசீர்வாதத்தை அடியேனுக்குத் தந்தருளும்.  

ஆமென்.