விதவைகள் வேண்டிக்கொள்ளும் ஜெபம்

எல்லாக் காரியங்களையும் எங்கும் வியாபித் திருந்து நடத்துகிற சர்வேசுரா, நீர் என்னை விதவையாயிருக்கச் சித்தமானீரே. நான் எல்லாத் துன்பங்களையும் பொறுமையோடு அனுபவிக்கவும் அதன் பலனையும் அதன் பிரயோசனத்தையும் கிறீஸ்துநாதரின் பரிசுத்த வேதத்துக்குத் தக்க மதியூகத்தோடு பிரயோகிக்க எனக்கு அருள் புரிந்தருளும். மெய்யான விதவையாயிருந்து உலக காரியங்களை வெறுத்துத் தள்ளி உம்மிடத்தில் என் நம்பிக்கையயல்லாம் வைக்கிறேன். பாக்கியமுள்ள சீவியத்துக்கு உதவுகிற நற்காலத்தை விர்த்தி செய்ய எனக்குக் கிருபை புரியும். அன்றியும் நீர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தை நான் நன்றாய்ப் பிரயோகிக்கவும், நான் இந்தப் பரதேசத்தில் வசிக்கும்போதே உமது இரக்கத்தைத் தேடிக் கொள்ளவும், நான் ஆவலோடு தேடித் திரிகிற நித்திய மோட்ச ஆனந்த பாக்கியத்துக்கு என்னைப் பங்காளியாக்கிக் கொள்ளவும், என் காலத்தைப் பக்தியிலும், சிநேகத்திலும், தேவ ஊழியத்திலும் செலவழிக்க எனக்கு வரமளித்தருளும்.  பூலோக காரியங்களை வெறுத்துத் தள்ளி முன் கடந்த பாவங்களையும், மூடத்தனத்தையும், ஊதாரிச் செலவையும் பரிகாரம் செய்யவும், இதுவரைக் கும் பூலோக காரியத்திலும், சோம்பேறித்தனத் திலும், கேடான முயற்சியிலும் நாள் கழித்ததற்குப் பதிலாக இனிமேல் ஒழிவான நேரத்தைச் செபத் திலும் நற்கிருத்தியங்களிலும் செலவழிக்கவும், என் பாவத்தால் காயப்பட்டதற்குப் பிராயச் சித்தமாக என்னை நானே தண்டித்துக் கொள் ளவும் என்னுடைய முயற்சிகளையயல்லாம் நித்திய சீவியத்துக்கு வழிப்படுத்த நான் கற்றுக் கொள்ளவும், நான் என் காலத்தை வீணில் செலவழித்ததினால் அடைந்த நஷ்டத்தை நிவிர்த்தி செய்யவும், உலக ஆறுதலைப் பார்க்கிலும் நான் உம்மிடத்தில் அதிக ஆறுதலடையவும், உம்மு டைய வரப்பிரசாதத்தால் என்னுடைய பலவீனங் களையயல்லாம் போக்கிக்கொள்ளவும் எனக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி. 

ஆமென்.