அர்ச். சூசையப்பர் நவநாள் - 2 ம் ஜெபம்

எனது இரட்சணியப் பிதாவான சூசை முனீந்திரரே! சேசுநாதர் பூலோகத்தில் உமக்கு மிகுந்த அமைதலோடு கீழ்ப்படிந்து மகா தயை யோடும், வெகுமானத்தோடும் ஆதரித்து நடந் தாரே; இப்போது பரலோகத்தில், உமது சுகிர்தங் களுக்குப் பலன் கொடுக்கிற இடத்தில், நீர் கேட் கிற எந்தக் காரியங்களுக்கும் இல்லை என்கிற துண்டோ? அதில்லையே, ஆனதினால் நீர் எனது தயவான பிதாவைப் போல எனக்காகப் பிரார்த் தித்து, முதலாவது - நான் என் சகல பாவங்களை யும் வெறுத்து, துர்க்குணங்களை அருவருத்து, சுகிர்தங்களுக்குப் பிரயாசைப்படும்படி தேவ வரப்பிரசாதமடையச் செய்தருளும். இரண்டா வது ‡ நான் நடக்கிற நல்ல வழிக்குப் பசாசு பண்ணுகிற சர்ப்பனைகளையும், உலகத்திலுள்ள விக்கினங்களையும் அகற்றி, என் சகல ஆபத்து அவசரங்களிலே பிரசன்னராய் எனக்கு நீர் சகாயம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன். இந்த நன்மைகளை எல்லாம் சர்வேசுரனின் சித்தத்தின் படியே அடைய உமது காருண்ணியமுள்ள அடைக் கலத்தை நம்பியிருக்கிறேன். சாகிறவர்களுக்கு உறுதித் துணையாகிய அர்ச். சூசையப்பரே! உமது வலது பக்கத்தில் நீர் வளர்த்த உம்முடைய பிள்ளையயன்று பேர் கொண்ட சேசுநாதரும், உமது இடது பக்கத்தில் உமது பத்தினியாகிய தேவ மாதாவும் உமக்கு ஆறுதல் சொல்லிக் கொண் டிருந்ததால் ஆனந்த சந்தோஷத்தோடு மரணத்தை அடைந்தீரே; அதை நினைத்து உம்மை வணங் கும் எங்களை இப்பொழுதும் மரண நேரத்திலும் சேசுநாதரும் தேவமாதாவும் தங்கள் திருக்கரங் களால் எங்கள் ஆத்துமங்களை ஒப்புக்கொள் ளவும், உறுதியோடு நாங்கள் மரணமடையவும் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் 

ஆமென்.