சலேத் மாதா பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அற்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமான சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கச்திப்படுகிரவர்களுக்கு தேற்றரவான புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்குச் சுகிர்த புத்திமதிகளை சொல்லத்தக்கதாக மோட்சத்தில் நின்றிறங்கி இரண்டு ஏழைப் பிள்ளைகளுக்குத் தரிசனையான புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுஷர் செய்கிற பாவங்களைப் பற்றித் திரளான கண்ணீர் சொரிந்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நாங்கள் பாவ வழியை விட்டு மனந்திரும்பத்தக்கதாக எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை முன்னறிவித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளான எங்கள் பேரில் கோபமாயிருக்கிற சர்வேசுரனுடைய கோபாக்கினையை உம்முடைய மன்றாட்டினால் நிறுத்துகிற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நம்முடைய ஜனங்களாகிய கிறிஸ்தவர்கள் மனந்திரும்பாது போனால் நமது திவ்விய குமாரனுடைய திருப் புஜமானது அவர்களைத் தண்டிக்க விட வேண்டியதாயிருக்கும் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுடைய பாவங்களைப் பற்றி அதிக வருத்தமும் கவலையும் படுகிற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுடைய நன்றியறிந்த தோத்திரத்திற்கும் நம்பிக்கை நேசத்திற்கும் பாத்திரமான புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மலையில் இரண்டு சிறு பிள்ளைகளுக்கு புத்திமதிகளைச் சொன்ன பிற்பாடு இதெல்லாத்தையும் சகல ஜனங்களுக்கும் அறிவியுங்கள் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுஷர் மனதிரும்பாதே போனால் அவர்களுக்கு மிகவும் பயங்கரமான தண்டனைகள் நேரிடும் என்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர்கள் திரும்பாதே போனால் வெள்ளாண்மைகள்  கெட்டு கடின பஞ்சம் வருமென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர்கள் மனந்திரும்பாதே போனால் உருளைக் கிழங்குகளும் முந்திரிகைக் குலைகளும் கோதுமை முதலான விளைவுகளும் அழிந்து போய்ச் சனங்களுக்கு மிகுந்த வருத்தமுண்டாகுமென்று அறிவித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர்கள் மனந்திரும்பாது போனால் ஏழு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் நடுக்கமேடுத்துச் சாவார்கள் என்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர்கள் மனந்திரும்பினால் சர்வேசுரனுடைய கோபம் மாறி வெள்ளாண்மைகள்  சரியாய் விளைந்து பஞ்சம் நீங்கி எங்கும் சவுக்கியமும் செழிப்பும் உண்டாகுமென்று திருவுளம் பற்றின புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மலையில் தேவரீர் சொன்ன புத்திமதிகளினால் அநேக பாவிகளை மனந்திரும்பச் செய்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுஷருடைய ஆங்காரம் அடங்காததைப் பற்றித் தேவரீர் முன்னறிவித்த பொல்லாப்புகள் எங்களுக்குச் சம்பவித்ததினாலே எங்கும் பேர் போன புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மலையில் தேவரீர் காண்பித்த அற்புதமானது பூலோகத்தின் எத்திசையிலும் பிரபல்லியமானதினாலே பேர் பெற்ற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மாதாவின் பேராலே கட்டுவித்த நானூற்று சில்வான கோயில்களில் வணங்கப்படுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீருடைய உபகார சகாயங்களினால் நானாவித சனங்களை உம்மிடத்தில் வரச் செய்கிற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எத்திசையிலும் மேன்மேலும் அதிகமதிகமாய்த் துதிக்கப்படுகிற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீரை மன்றாடுகிறவர்களில் ஒருவரையும் வியர்த்தமாய்ப் போக விடாத சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீர் திருப்பாதம் வைத்த இடத்தில் தண்ணீரூற்று அற்புதமாய்ப் புறப்படச் செய்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இந்தப் புனிதமான ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு கணக்கில்லாத அற்புதங்களைச் செய்விக்கிற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருடருக்குப் பார்வையும், செவிடருக்குச் செவியும், சப்பாணிகளுக்கு நடையும் மற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியமும் கட்டளையிடுகிற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எவ்வித துன்பக் கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும் தேற்றரவையும் கொடுக்கிற சலேத் மாதாவே புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியனை மங்கச் செய்கிற சோதிப் பிரகாசத்தோடு சலேத் மலையில் காண்பித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ரோசாப்பூ முடியும் நட்சத்திர கிரீடமும் காந்தியுள்ள மற்ற சோடிப்புகளும் அணிந்த வண்ணம் தரிசனையான சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இயேசுக்கிறிஸ்து நாதர் பாடுபட்ட திருச்சிலுவையையும் குறடு சுத்தியலும் மார்பில் அணியாக வைக்கப் பெற்று காண்பித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய நாளான ஞாயிற்றுக் கிழமையை நாங்கள் அனுசரியாதே போனால் எங்களுக்குக் கடின ஆக்கினை நேரிடுமென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞாயிற்றுக் கிழமையை அனுசரியாத பாவமும் தேவ தூஷணம் சொல்லுகிற பாவமும் இவ்விரண்டு பாவங்களும் விசேஷமாய்த் தேவ கோபத்தை மூட்டுகிறதென்று முன்னறிவித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுத்தபோசனக் கடனும் , கடனொருசந்தியும்  சரியாய் அனுசரிக்க வேண்டுமென்று கட்டளையிட்ட புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராச்செபமும் காலைச் செபமும் தப்பாமல் கற்பிக்க வேண்டுமென்று கற்பித்த புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளான எங்களுக்குத் தாயும் அடைக்கலமும் நம்பிக்கையும் ஆதரவுமாயிருக்கிற புனித சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தயாபரியாயிருந்து எங்களைத் தாபரித்துக் கொள்ளும் மாதாவே!

தயாபரியாயிருந்து எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை உமது வல்லபமுள்ள மன்றாட்டினால் அகற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

பஞ்சம் படை பெருவாரிக் காய்ச்சல் முதலான ஆக்கினைகளில் நின்று எங்களை இரட்சிக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

வேளாண்மைப் பயிர் விளைவுகள் சரியாய் விளைந்து எங்களுக்கு செழிப்பும் சௌக்கியமும் வரச் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

சத்திய வேதம் எத்திசையிலும் பரப்பவும் திருச்சபை எங்கும் ஸ்தாபிக்கப்படவும் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

இந்திய தேசத்திலுள்ள புறமஸ்தர் எல்லோரும் அஞஞானத்தை விட்டு விடவும் சத்திய வேதத்தைக் கைக்கொள்ளவும் செய்தருள வேண்டுமென்று
தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

பதிதருடைய தப்பறைகள் அழியவும் , பிரிவினைக்காரருடைய ஆங்காரம் நீங்கவும் , துஷ்டருடைய ஆலோசனைகள் தவிரவும் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

யூதர்களுடைய குருட்டாட்டம் நீங்கி, முகமதியர்களுடைய பிடிவாதம் ஒழிந்து அவர்களையும் இவர்களையும் சத்திய வேதத்திற்கு வரச் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

ஓ! மாதாவே , எங்கள் சந்தோசத்தில் திருப்தியும் , கஸ்திகளில் ஆறுதலும் புண்ணியங்களில் உறுதியும் எந்தக் கிரியைகளிலும் துணையுமாயிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

எங்கள் மரணத் தருவாயில் எங்களைக் கைவிடாமல் நல்ல பாவசன்கீர்த்தனமும் அவஸ்தைப் பூசுதலும் கடைசி நன்மையையும் இஷ்டப்பிரசாதமும் கட்டளையிட வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே!

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக

சர்வ சீவ தயாபர இயேசுவே, பாவிகளாயிருக்கிற அடியோர்களை மீட்டு இரட்சிக்கத்தக்கதாக உம்முடைய பரிசுத்த தாயாரான தேவமாதாவைக் கொண்டு உம்முடைய நீதிக் கோபத்தினால் எங்களுக்கு வரப்போகிற ஆக்கினைகளை சலேத் மலையிலே முன்னறிவிக்கச் சித்தமானீரே, நாங்கள் எல்லாரும் பயபக்தியோடு அஞ்சிப் பாவ வழிகளை விட்டு விட்டு மனந்திரும்பி உம்முடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் சுமுத்திரையாய் அனுசரிக்க அனுக்கிரகம் செய்தருளும் . எங்களுடைய பாவங்களின் நிமித்தமாக எங்களுக்கு நேரிட்ட பொல்லாப்புக்களை நீக்கி  வரப்போகிற ஆக்கினைகளை அகற்றி வேண்டிய நன்மைகளைத் தந்து சந்தோஷமான மனதோடு நாங்கள் உமக்கு இவ்வுலகத்தில் ஊழியம் செய்யவும் மறுலோகத்தில் உம்மோடு கூட என்றென்றைக்கும் வாழவும் செய்ய வேண்டுமென்று மன்றாடுகின்றோம் . பிதாவோடேயும் .இஸ்பிரீத் சாந்துவோடேயும் ஒன்றாய் இருந்து சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்து கொண்டு வருகிற ஆண்டவரே!

3 பர அரு திரி சொல்லவும்.

ஆமென்.