சிந்தாத்திரை மாதா ஜெபமாலை தேவரகசியங்கள்.

1. குழந்தை இயேசுவை பெற்றெடுக்க அன்னை மரியாளும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் யூதாவில் உள்ள பெத்தலேகேமிற்கு பயணமானதை (குழந்தை வரம், நலம் வேண்டி) தியானிப்போம். (லூக் 2  :5).

2. அன்னை மரியாளும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் குழந்தை இயேசுவோடு எகிப்திற்கு இரவிலே பயணமானதை (ஆபத்தில் பாதுகாப்பு வேண்டி)  தியானிப்போம் (மத் 2 :14).

3. அன்னை மரியாளும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் கலிலேயாவில் உள்ள நசரேத்திற்க்குபயணமானதை (திருக்குடும்ப வாழ்க்கை பயணம் வேண்டி ) தியானிப்போம் (மத் 2 : 23).

4. அன்னை மரியாள் பாஸ்கா விழா கொண்டாட எருசலேம் பயணமானதை (இறை பக்தி வேண்டி ) தியானிப்போம் (லூக் 2 :41).

5. அன்னை மரியாள் இயேசுவோடு கல்வாரிப் பாதையில் பயணமானதை (துன்பத்தில் துணை வேண்டி ) தியானிப்போம் (யோவா 19 : 25).