உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்கள் நவநாள் செபம்.

சர்வ வல்லபரான தேவனாகிய ஆண்டவரே, உமது திவ்விய சுதனாகிய சேசுநாதர் தமது மகா பரிசுத்த வியாகுல மாதாவின் பிரசன்னத்தில் தமது திருவிலாவினின்று ஏராளமாகச் சிந்தின விலைமதியாத திருஇரத்தத்தைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களையும், விசேஷமாக, இந்தத் திவ்விய இராக்கினியிடம் அனைவரிலும் அதிக பக்தியுள்ளதாக இருந்திருக்கிற ஆத்துமம் தேவரீருடைய மகிமைக்குள் சீக்கிரமாகப் பிரவேசித்து, அங்கே பரிசுத்த கன்னிகையில் உம்மையும், உம்மில் அவர்களையும் எக்காலங்களுக்கும் வாழ்த்திப் போற்றி ஸ்துதித்துக் கொண்டிருக்கும்படியாக அந்த ஆத்துமத்தையும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கும்படியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.

1 பர, 1 அருள், 1 திரி.

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி, முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.