வைகறைப் பொழுதுன் மலர்ப்பதம் தொழுது தரும் பலிப்பொருளை ஏற்பீர் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வைகறைப் பொழுதுன் மலர்ப்பதம் தொழுது

தரும் பலிப்பொருளை ஏற்பீர் இறைவா


1. இதயம் ஒன்றே அதை உமக்களித்தேன்

ஏழையின் உடைமை அதுவன்றோ

இனிமேல் வாழ்வது நானல்ல - என்னில்

இயேசு நீர் வாழ்ந்திடுவீர் எந்நாளும்


2. உலகின் மாயை அனைத்தையும் துறந்தோம்

உடைமை என்றே உமைத் தெரிந்தேன்

இதயத்தின் நிறைவால் வாய் பேசும் - உந்தன்

உறவினால் நான் வாழ்வேன் எந்நாளும்