ஒளியெல்லாம் நீயல்லோ இயேசய்யா வழியெல்லாம் நீயல்லோ இயேசய்யா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒளியெல்லாம் நீயல்லோ இயேசய்யா

வழியெல்லாம் நீயல்லோ இயேசய்யா

தாவீதின் குமரா என் இயேசுநாதா


1. நீ செல்லும் இடமெல்லாம்

நான் உன்னைத் தொடர்ந்தேன்

நீ சொல்லும் வார்த்தைகளால்

நான் உன்னை அடைந்தேன்

உன் பின்னே வருவோர்க்கு நல்லாசி தருவாய்

உன் பாதம் அடைவோர்க்கு நல்வாழ்வு தருவாய்


2. என்னிடம் வாருங்கள் என்று நீர் மொழிந்தீரே

உன்னிடம் ஓடி வந்தேன் என்னை நீர் காப்பீரே

இவ்வாழ்வின் இறுதியில் உம்மோடு இணைந்திட

நான் உந்தன் சொல்கேட்டு நல்வாழ்வு வாழ்வேன்