போற்றிப் புகழ்ந்திடுவேன் காத்திடும் இறைவனையே வாழ்த்தி மகிழ்ந்திடுவேன் வரங்களின் தேவனையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


போற்றிப் புகழ்ந்திடுவேன் காத்திடும் இறைவனையே

வாழ்த்தி மகிழ்ந்திடுவேன் வரங்களின் தேவனையே

நன்றி நன்றி நன்றி நன்றி


1. உலகைப் படைத்தாய் உயிரைத் தந்தாய்

உறவின் வழியாய் உனதருள் பொழிந்தாய்

அறிவைத் தந்தாய் ஆற்றல் தந்தாய்

உண்மை வழியில் வாழச் செய்தாய்

சுமைகள் ஏற்றாய் ஆறுதல் தந்தாய்

வீழ்ந்த போதும் தோளில் சுமந்தாய்

துன்பமோ துயரமோ என்ன செய்யும்

உனதருள் இருந்தால் நன்றி நன்றி


2. உந்தன் சிறகில் மறைத்துக் கொண்டீர்

உரிமை மகனாய் மேன்மை தந்தீர்

உண்மை அன்பில் மகிழச் செய்தீர்

எந்தன் மனதில் மாற்றம் தந்தீர்

பாதை மாறும் பொழுதினில் எல்லாம்

பரமன் உந்தன் ஒளியினைத் தந்தீர்

வாழ்ந்திடும் நாளெல்லாம் வல்ல தேவன்

உமதடி பணிவேன் நன்றி நன்றி