இரந்து படும் ஏழையின் பலி உமக்கு ஆகுமோ - என்றும் இணையில்லாத தேவனே இது தகுதியாகுமோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இரந்து படும் ஏழையின் பலி உமக்கு ஆகுமோ - என்றும்

இணையில்லாத தேவனே இது தகுதியாகுமோ


1. கலைந்த வாழ்வும் கவலை நெஞ்சும்

கருத்தில் வறிய செயலுமே

நிறைந்த வாழ்விலே படும் துயரின் நிலையிலே - உமை

உணர்ந்து புகழ்கின்றேன் என்னை

உவந்து அளிக்கின்றேன்

இனி என் வாழ்வில் இறைவனருளின்

இனிமை காணத் துடிக்கின்றேன்


2. மாசில்லாமை நிறைந்த உமது

புனித பெருமை காண்கிறேன்

மாசில் வாழவே மனம் வளைவதில்லையே - எமை

ஆளும் தேவனில் மனம் இணைவதில்லையே

குறைகள் தீர எனது கருத்தைக்

காணிக்கையென அளிக்கின்றேன்