விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் விசுவாசியே பதறாதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசியே பதறாதே

கலங்காதே திகையாதே விசுவாசியே

கல்வாரி நாயகன் கைவிடாரே


1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்

பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்

நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை

சொந்த கரங்களால் அணைத்து கொள்வார்


2. கொடும் வறுமையில் உழன்றாலும்

கடும் பசியினில் வாடினாலும்

அன்று எலியாவை போஷித்தவர்

இன்று உன் பசி ஆற்றிடாரோ


3. பிறர் வசை கூறி துன்புறுத்தி

இல்லாதது சொல்லும் போது

நீ மகிழ்ந்து களி கூறு

விண் கைம்மாறு மிகுதியாகும்