இணையில்லா இறைவனின் திருப்புகழை அனைவரும் இணைந்தே பாடிடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இணையில்லா இறைவனின் திருப்புகழை

அனைவரும் இணைந்தே பாடிடுவோம்


1. அருள் நிறை ஆயன் அக்களித்து

ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து

பரம்பொருள் அவன் பாதம் தனையே - நாம்

பரிவுடன் போற்றி வாழ்ந்திடுவோம்


2. வானுற உயர்ந்த மலைகளுமே

வண்ண எழில்நிறை மலர்களுமே

உனைத் தேடும் சின்ன உயிர்களுமே - நிதம்

உன்னத இறைவனை வாழ்த்திடுமே