நன்றி சொல்லிப் பாடுவோம் நல்லவரை வாழ்த்துவோம் வல்லவராகுவோம் வளமை காணுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி சொல்லிப் பாடுவோம் நல்லவரை வாழ்த்துவோம்

வல்லவராகுவோம் வளமை காணுவோம்

காலங்கள் நம் கையில் காயங்கள் கரைகையில்


1. மண்ணிலே விண்ணகத்தை மலரச் செய்யும் மனிதராய்

கண்ணிலே தீப்பிழம்பை கொண்டவர் தாம் கிறிஸ்துவே

ஆணவத்தை அடக்கவே அலையலையாய் செல்லுவோம்


2. சாதிகள் பேதங்கள் சந்தி தோறும் மோதல்கள்

சரித்திர நாயகனின் சாட்சியத்தால் சரியுமே

செல்லரிக்கும் சூழலை செயல்வழியில் மாற்றுவோம்