மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா என் மனம் ஏற்க தயக்கமோ நான் காகிதப் பூவென்ற வருத்தமோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா

என் மனம் ஏற்க தயக்கமோ நான்

காகிதப் பூவென்ற வருத்தமோ


1. வசந்தம் மறுத்தால் காற்றிலும் வாழ்வேன்

வான் மழை நின்றால் ஊற்றிலும் உய்வேன் (2)

செல்வங்கள் மறுத்தால் ஏழ்மையில் வாழ்வேன் -2

இயேசுவே நீயின்றி நான் எங்கு செல்வேன்


2. கனிகளைக் கொடுக்கும் கொடிகளின் முதல்வா

கனிவுடன் படைத்திடும் காணிக்கை ஏற்பீர் (2)

ஒலிவ மலைக்கு உம்முடன் வருவேன் -2

உயிராய் உடலாய் உம்முடன் வாழ்வேன்