ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப் பாமாலையாக நான் சூடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்

பாமாலையாக நான் சூடுவேன்

உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்

புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்


1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே - அங்கு

விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)

அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து

கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) - ஆதியும்...

ஆதியும் நீயே அந்தமும் நீயே

பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே

போற்றுகிறேன் உனை இயேசுவே


2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்

மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)

என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில்

எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)