இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே இனிய வரங்கள் பெறுகின்றோம் இறைவன் உறவிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே

இனிய வரங்கள் பெறுகின்றோம் இறைவன் உறவிலே

மனதில் தோன்றும் கவலைகள் மறையும் இறைவன் வரவிலே


1. உருகும் உள்ளம் மலர்ந்திடும் உயர் நற்கருணைப் பந்தியிலே

பெருகும் கண்ணீர் உலர்ந்திடும்

இறைவன் கருணைக் கரத்திலே


2. பழைய வேத வனத்திலே பொழிந்த மன்னா மறையவே

புதிய வேத மாந்தரின் புனித மன்னா இறைவனே