தரிசனம் தரவேண்டும் இயேசய்யா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே அய்யா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தரிசனம் தரவேண்டும் இயேசய்யா - என் மேல்

கரிசனம் உள்ளவர் நீரே அய்யா

பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்

தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும்

ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்

காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா


1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்

வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே

கப கக ரீ ரிக ரிஸ ஸா பத பதஸ பதஸ கா

ரிக ரிரி ஸா தத தத பா

கரி பக தப ஸத ரிஸ கரி ஸத கா

காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே

தேனின் சுவையோடு ஆ இயேசய்யா

கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான லயமுடனே


2. வானும் விண்மீனும் உலகோடுதான்

யாவும் உன் சாயல் தெளிவாகுதே ஆ

பாரில் எமக்காக தேவ சுதனாக

நாத கனிவோடு ஆ இயேசய்யா

தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே