கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 1 : "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள்: " ஆதியாகமம் 3 : 15

நமக்கெல்லம் மாதாவை 2000 ஆண்டுகளாகத்தான் தெறியும். ஆனால் கடவுளுக்கு உலகம் தோன்றும் முன்பே தெறியும். மேலும் என்றைக்கு ஏவாள் தவறு செய்தாளோ, என்று சாத்தான் உலகில் பாவத்தை நுழைத்தானோ அன்றே சாத்தானின் கதையை முடிக்க புதிய ஏவாளாக தேவமாதா கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டார்...

இவைகள் யாருக்கும் தெறியாத மறைபொருளாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஏன் மாதாவின் பெற்றோர்களான புனித சுவக்கின், அன்னம்மாளுக்கு கூட தெறியாது. ஏன் மாதாவக்கே தெறியாது கபரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லும் வரை. மாதாவும் மற்றவர்கள் போல மீட்புக்காக, மீட்பருக்காக காத்துக்கொண்டிருநதார்கள். எப்போதும் ஜெபித்துக்கொண்டும் வேதாகமத்தை (பழைய ஏற்பாடு) வாசித்துக்கொண்டும் ஜெபத்திலும் தவத்திலும் வாழ்ந்து வந்தார்கள்..

கடவுளை பொறுத்தவரை தன் அன்பு மகளான மாதாவை தன் சுதனான வார்த்தையானவருக்கு தாயாக தேர்வு செய்து விட்டு,

“ நாளாம் நாளாம் புனித நாளாம் மாதாம் மேரியின் பிறந்த” நாளுக்காக காத்திருந்தார்.

மகா பரிசுத்த தேவமாதா : இவர் ஒரு தூய்மை பெட்டகம். எளிதில் இரங்கி விடுவார், இளகியும் விடுவார். தேவமாதா விவசாயக் குடும்ப பின்னணியில் இருந்து வந்ததால் அவர்களுக்கே உரிய பரந்த மனப்பான்மை கொண்டவர்.

பாவம் இல்லாதவர்..

தூய்மையானவர், தூய்மையானவர், தூய்மை மட்டுமே உடையவர்...

மோயிசனுக்கு கடவுள் முள் செடியின் மீது காட்சியின் போது

“ மோயிசனின் காலணிகளை கழற்றவும், சற்று அப்பால் நிற்கவும் நிபந்தனை விதித்த கடவுள், அன்னையின் கருவறையில் பத்துமாதமிருக்க நம் தேவ அன்னைக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை..

இன்னொன்று அந்த முட்செடியே மகாபரிசுத்த தேவமாதான். ஏனென்றால் முட்செடி எரிகிறது; ஆனால் கருகவில்லை. நம் தாய் கன்னியும், தாயுமாய் இருக்கிறார்கள். இதுவும் இயேசு சுவாமி பிறப்பின் முன்னடையாளமே.

ஜெபம் : மூவோரு கடவுளான தந்தையே ! எங்கள் தேவ அன்னையின் தூய்மையை நினைத்து பார்த்துவிட்டு எங்கள் அகத்தை திரும்பி பார்த்தால் அது வானுக்கும் மண்ணுக்கும் உண்டான இடைவெளியை விட அதிகமாக இருக்கிறது. உம் திருக்குமாரனின் பிறந்த தினத்தை எதிர் நோக்கி இருக்கிற நாங்கள். கிறிஸ்துமஸ் விழாவை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்பதற்கு பதிலாக எந்த மன நிலையோடு கொண்டாடலாம் என்பதை சிந்திக்க கடமை பட்டுள்ளோம். இயேசு சுவாமியின் இரண்டாம் வருகைக்காகவும் காத்திருக்கின்ற வேளையில் எப்போதும் நம்மிடம் வந்து கொண்டிருக்கும் திவ்ய நற்கருணை ஆண்டவரையும் (அதுவும் ஆண்டவருடைய திருவருகைதான்) தியானிக்க மறக்காமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுகளும் உம்முடைய பிறப்பை கொண்டாடுகிறோம். ஆனால் உம்பிறப்பு எங்கள் ஆன்மாவில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் கொண்டாடி வருகிறோம். அதற்கு காரணம் நாங்கள்தான்.. எங்கள் கவனம் எல்லாம் உலகையே சுற்றி வருவதால்...

ஓ ! திவ்ய இயேசுவே இந்த முறை உம்மை நாங்கள் விடுவதாக இல்லை. நீர் எம் இதய குடிலில் பிறந்தே ஆகவேண்டும். அதற்காக எங்கள் உள்ளத்தை ஒரு ஆலயமாக மாற்றுவோம். உமக்காக எதையும் நாங்கள் இழப்போம்.. எம்மையே உமக்காக.. உம் திருவருகைக்காக.. திவ்ய நற்கருணையாக வரும் திருவருகைக்காகவும் சேர்த்து தயாரிக்க வரம் தாரும் இயேசுவே...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !