ஜெபமாலைப் புதுமை 3 : இரண்டு மேதைகளின் அனுபவங்கள்!

முதல் புதுமை (ஒரு விஞ்ஞானியின் அனுபவம்) : 1890ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த இரயிலில் ஒரு முதியவரோடு ஒரு கல்லூரி மாணவன் பயணம் செய்தான். அவன் என்ன கூறினான் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?

எதிரில் அமர்ந்திருந்த முதியவர் கையில் செபமாலை வைத்து செபித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவன் “மன்னியுங்கள் ஐயா! கிழவர்களுக்கே உரிய பத்தாம் பசலித்தன பக்தி முயற்சியை தாங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்?” என்று கேட்டான் அந்த இளைஞன்..

முதியவர் “நிச்சயமாக நம்புகிறேன். நீ அதை நம்பவில்லையா?

இளைஞன் “ஐயா உங்கள் முகவரியைக் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு சில புத்தகங்களை நான் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்” என்றான் அதிகம் படித்த கல்லூரி மாணவன்..

முதியவர் தன் முகவரி அட்டையை நீட்டினார். அதில் லூயி பாஸ்டர், விஞ்ஞான ஆய்வகம், பாரிஸ் என்று எமுதப்பட்டிருந்தது. இளைஞனின் முகம் வெளிறியது. அடுத்த ஸ்டேஷனிலேயே இளைஞன் இறங்கி வண்டி மாறினான்.

ஆனால் அந்த முதியவரோ –நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். Bio-Therapeutics என்ற சிகிச்சை முறையை உண்டாக்கியவர் என்றெல்லாம் உலகபுகழ் பெற்ற உயர் திரு லூயிபாஸ்டர். நிறைவான ஆயுளும் மகிமைகளும் பெற்றுள்ள எளிமை மிக்க கத்தோலிக்கர். மானுடத்திற்கு மாபெரும் உதவிபுரிந்த நல்லவர். 

1894 செப்டம்பர் 28ல் அமைதியாக உயிர் துறந்தார் என்று பிரித்தானிக் கலைகளஞ்சியம் அவரது வரலாற்றை முடிக்கின்றது. ஒரு கையில் செபமாலையும் மறு கையில் பாடுபட்ட சுரூபமும் ஏந்தி அவர் மரித்தார்.


இரண்டாவது புதுமை ( ஒரு இசை மேதையின் அனுபவம்) :

செபமாலை சொல்லும் போது “ மௌனமாகவோ, வாய்விட்டோ கர்த்தர் கற்பித்த செபத்தையும், மங்களவார்த்தை செபத்தையும் சொல்லும் போது மறையுண்மைகளை தியானிப்பது எப்படி?

நம் முழுகவனத்தையும் ஒருமுகப்படுத்திச் செய்ய வேண்டிய ஆக்கப்பணியிலும் கூட, இந்த உணர்வுகள் அடங்கிய அறிவு உதவுவதைப் பற்றி ஜோசப் ஹேய்டன் என்ற இசை வல்லுநர் கூறுவதை சற்று கேளுங்கள். 

“படைப்பு என்ற இசைக் காவியத்தை இசைத்தபோது, கற்பனையோட்டம் தடைபட்டப்போதொல்லாம் மேசையிலிருந்து எழுவேன். அறையில் முழந்தாளிட்டு செபமாலை சொல்லத் தொடங்குவேன். ஒரு சில மங்கள வார்த்தை சொல்லியிருப்பேன். உடனே தேவையான இசைக்கோர்வை ஊற்றெடுக்கும்” என்றார்.

ஒரு விஞ்ஞானிக்கும், இசை மேதைக்கும் தெறிந்த ஜெபமாலையின் அருமை நிறைய பேர்களுக்குத் தெறிவதில்லை..

நாள்தோறும் குடும்ப ஜெபமாலை ஜெபிப்போம்…

ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !