ஜெபமாலையின் அதிசயங்கள்! - 2

ஜெபமாலையின் மீது பக்தியை மீண்டும் புதுப்பித்த முத்.ஆலன் ரோச் தேவ தாயிடமிருந்து அநேக சலுகைகளை பெற்றார். அவர் தம் ஆன்ம இரட்சண்யத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒரு நல்ல குருவாகவும், உத்தம துறவியாகவும் நமதாண்டவரைப் போல் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், மாதா அநேக காட்சிகள் மூலம் அன்புடன் கற்றுக் கொடுத்தார்கள்.

முத். ஆலன் மிகக் கடுமையாக சோதிக்கப்பட்டார். பசாசால் கொடுமைப் படுத்தப்பட்டார். மிக ஆழமான துயரம் அவரை மூடிக் கொள்ளும். சில சமையம் அவ நம்பிக்கையின் அருகிலும் வந்து விடுவார். ஆனால் எப்போதும் தேவ தாயின் இனிய பிரசன்னதினால் அவர் ஆறுதல் பெற்றார். அவருடைய ஆன்மாவைக் கவ்வியிருந்த இருண்ட மேகங்களை அன்னையின் பிரசன்னம் அகற்றி விடும்.

ஜெபமாலையை எப்படிச் சொல்வது என்பதை மாதா அவருக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் விளையும் பலனை விளக்கிச் சொன்னார்கள். ஒரு மாபெரும் மகிமையான சலுகையை தேவ அன்னை அவருக்குக் கொடுத்தார்கள். அது என்னவென்றால் தன் புதிய பத்தா என்று அழைக்கப்படும் மகிமை. தான் அவர் மீது கொண்டிருந்த புனிதமான அன்பின் அடையாளமாக அவருடைய விரலில் ஒரு மோதிரத்தையும் அணிவித்தார்கள். தன் தலையின் முடியால் வனைந்த ஒரு கழுத்தனியை அவர் கழுத்தில் பூட்டினார்கள். ஒரு ஜெபமாலையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

சங்கைக்குரிய அருட்தந்தை திரிதெம் என்பவரும் மிகவும் கற்றறிந்தவர்களான கார்த்தஜெனா, நாவார் நகர் மார்ட்டின் இன்னும் மற்றவர்களும் முத். ஆலனைப் பற்றி மிக உயர்ந்த புகழ் மொழி கூறியுள்ளார்கள். 1470-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8- நாள் ஃபிளாண்டர்ஸிஸ், சூநோல் என்னுமிடத்தில் மரித்தார். 100,000 பேரை ஜெபமாலைப் பக்தி சபையில் சேர்த்திருந்தார் அவர்.

நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்

“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “ ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை… 

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !