திருப்பலியும் சம்மனசுக்களும்

தெய்வீக திருப்பலி பற்றி மேலும் புனிதர்கள் பேசுகிறார்கள்:

அர்ச்.கிரகோரியார் : “பூசைப்பலியில் பங்குபெறும்படி வானமண்டலங்கள் திறக்கப்பட்டு சம்மனசுக்களின் படையணிகள் இறங்கி வருகின்றன “

அர்ச். அகுஸ்தினார் : “ குருவானவர் பூசை நிறைவேற்றும்போது, தேவ தூதர்கள் அவரைச் சூழ்ந்து நின்று அவருக்கு உதவி செய்கிறார்கள்.

அர்ச். கிரீசோஸ்தோம் அருளப்பர் : “ திவ்ய பலி நிறைவேறும்போது, தேவாலய பீடபகுதி எண்ணற்ற சம்மனசுக்களால் நிரப்பப்படுகிறது. இவர்கள் பீடத்தின் மீது பலியிடப்படும் தேவப் பலிபொருளானவரை ஆராதிக்கிறார்கள்.

பூசையால் விளையும் நன்மை மிக அற்புதமானது. கடவுளின் இரக்கமும், தாராளமும் அப்போது எவ்வளவு அளவுக்கு உட்படாத்தாக இருக்கிறது என்றால், நமக்கு தேவையான நன்மைகளை கேட்க பீடத்தின்மீது சேசு பாலன் பிறக்கும் நேரத்தைவிட மிகச்சிறந்த நேரம் வேறு எதுவுமில்லை. அப்போது நாம் கேட்கும் எதையும் நாம் ஏறக்குறைய நிச்சயமாக பெற்றுக்கொள்வோம். பூசையில் நாம் பெற்றுக்கொள்ளாத்தை மற்ற ஜெபங்கள், தவ முயற்சிகள் அல்லது திருயாத்திரைகளின்மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புவது மிக அரிது.

சம்மனசுக்கள் இதை முழுமையாக அறிந்துள்ளனர். ஆகவே அவர்கள் இரக்கத்தின் வேளையில் கடவுளை ஆராதிக்கவும், தங்கள் விண்ணப்பங்களை கடவுளின் முன் சமர்பிக்கவும் பெருங்கூட்டமாக இறங்கி வருகிறார்கள்.

அர்ச். விர்ஜித்தம்மாளின் வெளிப்பாடுகளிலிருந்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம் :

“ஒருநாள் நான் திவ்வியபலி பூசையில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும்போது பெருந்திரளான சம்மனசுக்கள் இறங்கி வந்து, பீடத்தைச் சுற்றி நின்று குருவானவர் செய்யும் காரியங்களை தியானித்துக் கொண்டிருந்த்தைக் கண்டேன். என் இருதயத்தைக் கொள்ளை கொண்டு பரவசத்தில் ஆழ்த்திய பரலோக கீதங்களை அவர்கள் பாடினார்கள். பரலோகம் முழுவதுமே அந்த மாபெரும் தேவபலியைக் கண்டு தியானித்துக் கொண்டிருந்த்து போலிருந்தது. ஆனால் ஏழைகளும் ( ஆன்மீகத்தில்), குருடர்களும், பரிதாபத்திற்குறிய சிருஷ்டிகளுமான நாம் எவ்வளவோ குறைவான நேசத்தோடும், ஆசையோடும், வணக்கத்தோடும் அதில் பங்கு பெறுகிறோம் “

“ஓ கடவுள் மட்டும் நம் கண்களைத் திறப்பார் என்றால் எத்தகைய அதிசயங்களைத்தான் நாம் பூசையில் காண மாட்டோம் “

அர்ச். ஆசீர்வாதப்பர் சபையின் பரிசுத்த துறவற குருவாகிய முத்.ஹென்றி சூசோ ஒரு நாள் பூசை வைத்துக்கொண்டிருந்த போது, சம்மனசுக்கள் காணக்கூடிய விதத்தில் பீட்த்தைச் சுற்றி ஒன்று கூடினார்கள். அவர்களில் சிலர் நேசப்பரவசங்களில் அவர்கள் அருகில் வந்தார்கள்.

நாம் காண்பதில்லை என்றாலும் ஒவ்வொரு திருப்பலி பூசையிலும் நடப்பது இதுதான்.

இந்த அதிசயத்திற்குறிய உண்மையைக் கத்தொலிக்கர்கள் எப்போதாவது நினைக்கிறார்களா? பூசையின்போது ஆயிரக்கணக்கான தேவதூதர்களுக்கு மத்தியில் ஜெபித்துக்கொண்டிருக்க்கிறார்கள் என்பதை.

- திவ்விய பலி பூசையின் அதிசயங்கள் என்ற நூலிலிருந்து, ஆசிரியர் : சங். பவுல் ஓ சலைவன், O.P

திவ்விய பலிபூசையின் மகத்துவம் தெறிந்து தகுந்த முறையில் பங்கெடுத்து திருப்பலியின் பரிபூரண பலங்களை பெற்ற நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

இயேசுவுக்கே புகழ் !! இயேசுவுக்கே நன்றி !! மரியே வாழ்க !!