திரு இருதய ஆண்டவரின் பண்ணிரெண்டு வாக்குறுதிகள்!

திரு இருதய ஆண்டவர் புனித மார்கரீத்து மரியாவுக்கு நான்கு முறை காட்சிக் கொடுத்தார்.  நான்கு கட்சிகளிலுமே இயேசு சொன்னது பாவிகளால் என் இருதயம் மிகவும் துயரம் அடைகிறது என்று துயருற்றார். நான்காவது காட்சியின் வழியாக தம் பக்தர்களுக்கு 12சிறப்பான வாக்குறுதிகளை அருளியுள்ளார்.

1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.

2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.

3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம்.

4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.

5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.

6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாகஇருக்கும்.

7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.

8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.

9. எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.

10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்குஅளிப்போம்.

11. திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடிபொறிக்கப்படும்.

12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம்பகைவராகவோ, திருவருட் சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்

சிந்தனை

நாமும் நம்மையும் நம் குடும்பங்களையும்  மனம் திருந்தாத அனைத்து பாவிகளையும் நமது ஒவ்வொரு செபத்திலும் அன்னையின் மாசற்ற இருதயத்தின் வழியாக இயேசுவின் திரு இருதயத்திற்க்கு ஒப்புக்கொடுப்போம்

ஆமென்.