மே 18

அர்ச். தெயதோதும் துணைவரும். வேதசாட்சிகள் (கி.பி.303)

தெயதோதுஸ் சின்ன ஆசியாவில் அன்சீரா ஊரில் கடை வைத்து வாழ்ந்து வந்தார். இவர் சிறு வயதிலிருந்தே தேவ பயபக்தியுள்ளவராய் ஜெபம், தபம், உபவாசம், ஒருசந்தி முதலிய புண்ணியங்களை அனுசரித்து விசேஷமாக ஒறுத்தல் முயற்சியை கடைப்பிடித்து வந்தார்.

இவருக்குத் திரண்ட செல்வமிருந்தும், அதில் பற்றுதல் வைக்காமல் தான தர்மம் செய்துவந்தார். அக்காலத்திலுண்டான பயங்கர வேத கலாபனையில் கணக்கில்லாத கிறீஸ்த வர்கள் வேதசாட்சிகளாக மரித்தார்கள்.

அநேகர் நாட்டை விட்டு காடுகளுக்கும் மலைகளுக்கும் ஓடிப்போனதினால் அஞ்ஞானிகள் கிறிஸ்தவர்களுடைய வீடு களைக் கொள்ளையடித்தார்கள். மேலும் ஊர்களில் தங்கயிருந்த கிறீஸ்தவர் களைப் பசியால் வாதிக்கும் எண்ணத்துடன், கடைகளில் விற்கப்படும் ஆகார பொருட்களை சிலைகளுக்குப் படைத்து விற்கும்படி இராயன் கட்டளையிட்டான்.

அப்போது தெயதோதுஸ் தமது கடையிலுள்ள பொருட்களை கிறீஸ்தவர் களுக்கு சொற்ப விலைக்கு விற்பனை செய்து, ஜெபத்தாலும் புத்திமதியாலும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்தார். இவருடைய புண்ணியத்தால் அநேகப் புதுமைகளைச் செய்து, அஞ்ஞானிகளையும் யூதரையும் மனந்திருப்பி, வேத சாட்சிகளின் திருச்சரீரத்தைப் பக்தியுடன் அடக்கஞ் செய்துவந்தார்.

அந்தச் சமயத்தில் வேதத்திற்காக பிடிபட்ட 7 கன்னியரைச் சந்தித்து, அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவியும் ஆறுதலும் புரிந்தார். அவர்கள் வேதத்திற்காக மரித்தபின் அவர்களுடைய சரீரங்களை அடக்கஞ் செய்தார்.

இதனால் அவர் பிடிபட்டு, சரீரம் முழுவதும் கிழியும்படி அடிக்கப்பட்டு நெருப்பில் போட்டு சுடப் பட்டு, கற்களால் அலகு எலும்புகள் உடைக்கப்பட்டு மகா வேதனைக்குரிய சக்கரத்தில் வாதைப்பட்டு, மரணத்திற்கு உள்ளாகி, வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை 

நாமும் நமது ஆலோசனையாலும், நன்னடத்தையாலும், பொருளுதவி யாலும் பிறருக்கு உதவி புரிவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எரிக், இ.வே.
அர்ச். வெனான்சியுஸ், வே.
அர்ச். போதமன், வே.