வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் ***

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்
எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம்
அன்பாய் ஏற்றிடுவாய்

1. இறைவா உன்னில் இணையா வாழ்வு
இருந்தும் பயனென்ன
இகத்தில் நீ தந்த வாழ்வைத் தந்தால்
எனக்கு இழப்பென்ன ஆ
இனி வாழும் காலம் இனிதாக வேண்டும்
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்

2. இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னைத் தேடுதே
உன்னில் இணைந்து உயிர் பெறவே விரைந்து நாடுதே
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்