தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச்சரிதை - பாகம் 5

ஹா! பெருமூச்சும், விம்மிதமும், அழுகையுங்கலந்த மந்திர ஒலியானது திவ்ய தாயின் திருச்செவிகள் வழி யூடுருவி அவளது திரு ஹிருதயத்தை வதைத்ததாகிய வாதனையை எமது தாய் சகிக்கமுடியாதவளாய், அவள் புரிந்தருளிய அற்புத நலத்தை எந்த நாவைக்கொண்டு புகல்வது?

'ஐம்பத்து மூன்று மணிச்செபமும், "மிகவும் இரக்க முள்ள தாயே'' என்ற ஜெபமும் ஜெபிக்கப்பட்டு முடிந்தன. அப்பால், அர்ச்செயசிஷ்டகன்னிமரியாயிதஸ் நேவிஸ் மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற இறுதி ஜெபத்தை மும்முறையுச்சரித்து முடி யுந் தருணம், ஹா! என்ன அற்புதம்! மேக்கர்ச்சனையை நேர ஓர் பேரொலி ஆலயமெல்லாம் அதிரும்படி கேட் சப்பட்டது, இவ்வளவே;

எல்லோரும் வெளி வந்தனர். ( அ கப்பட்டன, அகப்பட்டன'' என்ற பேரிரைச்சல் அண்டம திர்க் தன. அற்புதம்! அற்புதம்!'' என் ற ஓசையானது நாலு திக்குகளிலிருந்தும் சப்திக்கின்றது. திருமுடி களைக் கண்குளிரக்கண்டு தெரிசிக்கவேண்டுமென்ற அவாவினால் இழுக்கப்பட்டு ஜனங்களனை வரும் ஒருவர் மேலொருவர் மோதிக்கொண்டு கூட்டத்தினிடைப் புகுவாராயினர். இஃது பெருந்துயரத்தைத் தருவதா பிருந்தது. உடனே, எவ்விடத்திலிருந்தபோதிலும் ஏக காலத்தில் எல்லாருங் கண் குளிரக்கண்டு தெரிசிக் கும்படி உயர்ந்த ஓரிடத்தில் எமது தாயினதும் அவளது திருக்குமான தும் திருமுடிகள் ஸ்தாபிக்கப்பட்டன. ஹா! பயங்கரம் அழகிய முடிகள் நசுங்கப்பட்டு அழ இழந்திருந்தன, சில தாரகைகளும், அத்தாரகைகளை யேந்தி நிற்கும் வில் வளைவுகளில் சிலவற்றையும் கா. ண முடியவில்லை. எனினும், எல்லாரும் இனிது தெரிய சித்துத் தாயின து அ தியற்புத விசேஷத்தைக் கண் ணாரக் கண்டு, வாயாரப் புகழ்ந்து அவரவர் இல்லம்புகு. வாராயினர்.

மேற்கூறிய திருமுடிகள் இரண்டும் தேவாலயத் துக் கெதிராகக் கடற்கரையருகில் செப்பனிட்டுவைக்கப் பட்டிருந்த இருப்புப் படகுகள் என்னுக்சடியில் கண்டெடுக்கப்பட்டன. சதியர் யாரோ தென்படவில்லை தேவதாயும் ஷமித்துவிட்டாள், அவளது அன்பும், அருளும் என்றும் நிலவுமாக. அவளது பண்பும் பாது காவலும் விசேஷமாய்ப் பரததலத்தவர் மத்தியில் பிரகாசிக்தமாக. இஃதிங்ஙனமாகத், தீயாகளால் தீண்டப்பட்ட அத் திருமுடிகளை நன்கு செப்பனிட்டுக் கரீடதாரணஞ்செய்யத் தினங்குறிப் பிடப்பட்டது. 

1920 செப்டம்பர் மாதம் 9 தேதி வியாழக்கிழமை முதல் 12-உ ஞாயிற்றுக்கிழமை வ ாை கிரீடதாரணை உத்ஸவம் வெகு சிறப்பாகவும், வெகு கெம்பீரமாகவும் நடைபெற்ற து. எமது நகர்ப் பங்கு விசாரணை, மிகவும் சங்கைக்குரிய A. மோனீஸ் சுவாமி யவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து இவ்வுளவத்தை மிகு விமரிஸையாகக் கொண்டாடினர். திருவிழாவின் கடைசித தினத்திற்கு முந்தின தினமாகிய சனிக்கிழ மையன்று காலை முதல் மாலை வரை நிந்தைப்பரிகார ஆராதனை செய்யும் பொருட்டாய் திவ்ய சம்பிரசாதம் எழுந்தேற்ற ஸ்தாபகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. கடைசித் தின மாகிய ஞாயிற்றுக்கிழமை பாடற் பூசை தேவாராதனை முதலிய சடங்குகள் நிறைவேறிய பின் மிகவும் சங்கைக்குரிய A. மோனிஸ் சுவாமியவர்கள் பிரசங்கத்தொட்டியிலேறி சுமார் ஒரு மணி நேரம் வ ரை, கேட்போர் மனது பரவசமாகும் வண்ணம் திவ்ய தாயினது பிரபாவங்களை வாசாமகோசரமாய்ப், தேனும், பாகும் பழமும் கலந்து ஊட்டியது போல் பிர சங்கமாரி பொழிந்தனர்.

அப்பால், கனம் சுவாமிய வர்களால் பரலோக பூலோக ராஜேஸ்வரியும், பாவிகளுக்கடைக்கலமும், எழு கடல் துறைக்கும் நாமுண்டென்று பிசகா த அ ர ணா யிருப்பவளும், பரதவர் பாதுகாவலும், மாதாவுமாகிய திவ்ய சந்த:மரிய தஸ்நேவிஸ் ஆண்ட வளுக்கும் அவ ளது திருக்குமானுக்கும் கிட தாரணம் செய்யப்பட் டது. சந்தோஷ ஆரவார தேங்கள் கோஷித்தன. பரம தேவதாயை யாவரும் தெரிசித்து, அவளது திருப் பாத முத்திசெய்து, இஷ்டசிததிகளைப் பெற்றுச் செல்லும் மாறு திவ்ய சொரூபத்தைப் பீடத்தின் மத்தியில் ஸ்தா பகம் செய்து வைக்கப்பட்டன.

அவ்வாறே, காலை முதல் மாலை வரை பத குலத்தினர் யாவரும், ஏனைய கிறிஸ்தவர்களும் இடைவிடாது தெரிசித்துப் பாதமுத்திசெய்து செல்வாராயினர். இர வில்பஜனைக்கோஷ்டியார் மேளதாளங்களுடனும் தேவ தாயின் சித்திரப்படத்துடனும் தேவதாயின் பிரபாவங் களை யும் பிரஸ் தாபசம்பவங்களையுங் குறிப்பிடக்கூடிய பாட்டுக்களைப்பாடி ஊர்வலம் வந்தனர். கிரீடதாரண வைபவம் முற்றுப்பெற்றது.

மங்கள முண்டாகுக.