அடக்கம் செய்யும் ஒழுங்கு

பிரேதம் எடுக்குமுன் செபம்

சுவாமி! இவனுக்கு முடிவில்லாத காலத்தின் பேரின்ப சுகத்தைக் கட்டளையிட்டருளும். நித்திய காலத்தின் பிரகாசம் இவனுக்குப் பிரகாசிக்கக் கடவது. ஆமென்.

சுவாமி கிருபையாயிரும்.

கிறீஸ்துவே கிருபையாயிரும்.

சுவாமி இவன்மேல் தயையாயிரும்.

ஒரு பர.

நரக வாசலிலே நின்று இவனுடைய ஆத்து மத்தைக் கைதூக்கி இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.  இவன் சமாதானத்தில் இளைப்பாறக் கடவானாக.

சுவாமி! நாங்கள் இந்த ஸ்தலத்திலே இருந்து கூப்பிடுகிற சத்தம், தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  தேவரீருடைய அடியானாகிய இவனுடைய ஆத்துமத்தின் பாவ அச்சத்தைப் போக்கி, உலகத்துக்கு இவன் செத்தவனாயிருந்தாலும் பரகதியில் உமக்குப் பிழைக்கிறவனாயிருக்கவும் சரீரத்தின் துர்ப்பலத்தினால் இவன் செய்த குற்றங்கள் உமது மட்டில்லாத கிருபா கடாட்சத்தால் பொறுக்கப்படவும் அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்துத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.