திவ்ய தஸ்நேவிஸ் மாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வலோக சராசரங்களையும் படைக்கு முன்னமே சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீயையுமிழ்ந்து தீக்குணங்களையே ஓயாது செய்கின்ற ஆதி சர்ப்பத்தின் தலையை நொறுக்கி நசுக்கிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குளிர்ந்த நிலவைப் பொழியும் சந்திரனைப் பாததாமரையால் மிதித்திலங்குந் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடர்ந்த இருளை நீக்குஞ் செஞ்சுடராகிய ஆயிரங்கதிரோனை ஆடையாகத் தரித்திலங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பன்னிரண்டு விண்மீன்களைத் திருமுடியின் மகுடமாய்க் சூடியிலங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பைசாசகணங்கள் நடுங்கிப் பதுங்கும் பரிசுத்த நாமாலங்காரியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அறுமூன்று மகுடாதிபதிகளின் குலவிளக் காய் விளங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வலம்புரியுதிர்த்த வெண்முத்தைப் பார்க்கி லும், மகா அலங்காரம் பொருந்திய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அகில முழுவதும் போற்றும் அருணனாகிய சுவாமிக்கு முன் தோன்றும், உதயதாரகையாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல வரப்பிரசாதங்களும் மலிந்த சம்பூரண அலங்காரியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீதரசனின் திருமுடியில் துலங்கிய ஜீவ ரத்தினமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரிய தத்தத்தினாற் பூரணமானவளே வாழ்கவென்று, பிரபல தேவதூதனால் வாழ்த்தித் துதிக்கப்பட்ட திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக பூலோக பாதாளலோகமென்னுந் திரிலோகங்களிலும் அடங்காத தேவாதி தேவனைத் திருவுதரத்திலடக்கித் தாங்கிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கொடுங்கோலனாகிய ஏரோதரசனின் கொலை பாதகத்திற்கஞ்சிக் குழந்தையாயிருந்த உலக இரட்சகரை, எகிப்து இராச்சியத்துக்குக் கொண்டு போய் இரட்சித்தவளாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகோன்னத பரிசுத்த கோதுமை அப்பத்தின் மாதாவாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அக்கினிக்குள் வேகாத அழகிய முட்செடி யில் தோன்றிய, அசரீரி வாக்கியத்தின் திரு மகளாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலர்கள் மேலிறங்கிய சிவந்த அக்கினிநாக்கு உருவத்தின் அமல பத்தினியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூலோக ஆசைகளை வெறுத்து, மேலோக ஆசை கொண்ட வேதசாட்சிகளின் திட தைரியமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவ துர்க்கந்தத்தை ஒழிக்கும் பரிமளக் கந்தமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பேய்க்குணங்கொண்ட படைகளைச் சிதறடிக்கும் வாள் ஆயுதமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேத விரோதமாய் படரும் அடர்ந்த கார்மேகங்களைத் துரத்தியடிக்கும் பிரசண்ட மாருதமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்திய திருச்சபையின் அழியாத வச்சிரத் தூணாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மோட்ச சாம்ராஜ்யத்தின் வெற்றி துவஜ மாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சந்நியாசிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் முன்மாதிரியாகும் கற்பலங்காரம் நிறைந்த திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகங்களையும் பரிபாலிக்க நாம் அதிகாரமுடையோமெனக் காண்பிக்க, சர்வ லோக நாயகனைத் திருக்கரத்தேந்தி இலங்கும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலக மீட்பராகிய உமது குமாரன் ஞானஸ் நானம் பெற்ற நன்னீர் நிறைந்த யோர்தான் நதியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆதித்தாய் தந்தையர் செய்த தோஷத்தை நீக்கி, அடைபட்டிருந்த மோட்ச கபாடத்தை திறந்தருளிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்திய வேதத்தை தூஷித்து அலையும் பதிதரின் பொல்லாத நாவிற்கு ஆணியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்காகப் பரிந்து பேசிப் பரகதி கொடுக்கும் வரம்நிறைந்த பாவிகளின் அடைக்கல மாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடலிலும் வனத்திலும் வருந்தும் பக்தர்களுக்கு, வலியத் தரிசனையாகி அகமகிழ்வோடு உதவி புரியும் ஆபத்திற்கு அபயமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீராத நோயாளிகளுக்கு உத்தம மருந்தாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாடாத திவ்விய மணமெறியும் ரோசாப் புஷ்பமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அழுகண்ணர்களின் அழியாத பாக்கியமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகாத்துமாக்களின் மகத்துவம் தங்கிய நல்ல ஆலோசனையாகும் திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தருமவான்களின் விசேஷ தயாளமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொறுமையின் குன்றாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாழ்ச்சியின் பொக்கிஷமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நவவிலாச சம்மனசுக்களின் மகிமை மிகுந்த அரசியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்திய வேத இராஜாக்களுக்குள் சமாதானத்தை வளர்க்கும், ஐக்கியம் நிறைந்த சக்கரவர்த் தினியாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக சக்கரவர்த்தியின் அமல பத்திராசன மாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கொள்ளை நோயை விலக்கும் வல்லபம் வாய்ந்த மகா பண்டிதையாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகநாயகன் சொன்ன சத்திய வாக்கி யத்தின் சாட்சியாக வானமண்டலத்தில் பிரகாசிக்கும் பச்சை வில்லாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வெண்பொன்னை நிகர்த்த பனிமயமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீலோற்பவத்தைப் பழிக்கும் இரு நேத்திரங் களால் எங்களை எந்நாளும் கடாட்சித்து காத் தருளும் காருண்ய தாயாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சாதுக்களாகிய சகல புனிதர்களின் சதா ஆனந்தமாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிலுவைப் பத்திராசனத்தில் உயிர்விடும் தருணம் உலக இரட்சகராகிய உமது திருக் குமாரனால் எங்களுக்குக் கையளிக்கப்பட்ட ஏக அடைக்கலத் தாயாகிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உரோமை மாநகரில் பத்ரீஸ் அருளப்பருக்கும் அவர் மனைவிக்கும் பிரசன்னமாகி, எஸ்கலீன் மலையில் ஒரு தேவாலயம் கட்டும்படி திருவாய் மலர்ந்தருளிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பனி பெய்யக் கூடாத உஷ்ணக் காலத்தில் உறைபனியைப் பெய்வித்து, ஆலயங்கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்தருளிய திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த லிபேரியு பாப்பரசருக்குத் தரிசனை தந்து, அதிசயங்களைச் செய்தருளிய எஸ்கலீன் மலை நாயகியான திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி. 

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். சேசுவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப் படக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வலோக கர்த்தாவும், உலக மீட்பருமாகிய உத்தம சேசுவே! தேவரீரை மனு­ சுபாவத்தின் படியே பெறுமுன்னும், பெறும்போதும், பெற்றதின் பின்னும் கன்னிமை குன்றாதிருக்க வரம் பெற்ற தேவரீருடைய திருமாதாவின் பாதாரவிந்தங்களை அடைக்கலமாய்த் தேடிக் கொள்ளுகிற அடியோர், அத்திருமாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டினால் உலகம், சரீரம், பசாசெனும் சத்துருக்களுடைய மாய்கையாகிய அந்தகாரத்துள் அகப்படாமல் தேவரீருடைய பரிசுத்த வரப்பிரசாதமாகிய திருச்சுடர் பரவிய இருதயங்களோடு, இவ்வுலகத்திலே தேவரீருக் குப் பணிசெய்து, சதா காலமும் பேரின்ப வீட்டிலே அத்திருத்தாயாரோடும் சகல வானோர்களோடும் தேவரீரைத் தோத்தரித்து வாழக்கிருபை புரிந்தருளும் சுவாமி. பிதா வோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதா காலமும் சீவியருமாய் இராட்சிய பாரம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே.

ஆமென்.