அவஸ்தைப் பிரார்த்தனை

சுவாமி இவன்மேல் கிருபையாயிரும்.

கிறீஸ்துவே இவன்மேல் கிருபையாயிரும்.

சுவாமி இவன்மேல் கிருபையாயிரும்.

பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, இவனுக்குத் தயை செய்தருளும் சுவாமி.

உலகத்தை மீட்டிரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, இவனுக்குத் தயை செய்தருளும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, இவனுக்குத் தயை செய்தருளும் சுவாமி.

அர்ச். தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வே சுரா, இவனுக்குத் தயை செய்தருளும் சுவாமி.

அர்ச். மரியாயே, இவனுக்காக வேண்டிக் கொள்ளும்.

தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். ஆபேலே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

புண்ணிய ஆத்துமாக்களான சகல அர்ச்சிய சிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். ஆபிரகாமே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். ஸ்நாபக அருளப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். சூசையப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களும் தீர்க்கத்தரிசிகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். இராயப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். சின்னப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பிலவேந்திரரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். யாகப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். அருளப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆண்டவருடைய சகல பரிசுத்த சீஷர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மாசில்லாத குழந்தைகளே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். முடியப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். சில்வெஸ்தரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். கிரகோரியாரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். அகுஸ்தீனே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

மேற்றிராணிமார்களும், ஸ்துதியருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். ஆசீர்வாதப்பரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பிரான்சிஸ்குவே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். கமீலியாரே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். தேவ அருளப்பரே,  இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

குருக்களும் தபோதனர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். மரிய மதலேனே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பிரகாசியம்மாளே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளும், விதவை ஸ்திரீகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆண்டவருடைய திருவடியார்களாக ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனு(ளு)க்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

தயாபரராயிருந்து இவனு(ளு)டைய பாவங் களைப் போக்கியருளும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

சகல பொல்லாப்புக்களிலே நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சகல பாவங்களிலே நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கோபத்திலும் தண்டனை யிலும் நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய தயவின்மேல் அவநம்பிக்கை யிலும், மரண அவஸ்தையிலும் நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சாவின் பயங்கரத்திலும் சீவன் மேலுள்ள மிகுந்த ஆசையிலும் நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

துர்மரணத்திலே நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நரக வாதையிலும் சகல பொல்லாப்பிலும் நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசின் சோதனையிலும் தந்திரத்திலும் நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உலக காரியத்தில் ஊன்றி நித்தியத்திற்கு ஆயத்தப்படாத அசட்டையிலும் நின்று, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு அவதாரத்தைப் பார்த்து, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சிலுவையையும் பாடுகளை யும் பார்த்து, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு மரணத்தையும் அடக்கத் தையும் பார்த்து, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய அதிசயமான ஆரோகணத் தைப் பார்த்து, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேற்றரவு செய்கிறவரான இஸ்பிரீத்துசாந்து வின் வரப்பிரசாதத்தைப் பார்த்து, இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரண வேளையிலும் நடுத்தீர்க்கிற நாளிலும், இவனை (இவளை) இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பாவிகளாகிய நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

இவனுடைய பாவங்களைப் பொறுத்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சுவாமி  எங்கள்  மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது. 

(பரலோக மந்திரம்)