குழியில் வைக்குமுன் ஜெபம்

சுவாமி! தேவரீர் நரக வேதனையிலேயும் சகல உபத்திரவங்களிலேயும் நின்று, உம்முடைய அடியானாகிய இவனு(ளு) டைய ஆத்துமத்தை இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமி!  தேவரீர் ஏனோக், எலியாஸ் என்ப வர்களைச் சாதாரணமான உலக சாவிலே நின்று இரட்சித்தது போல இவனு(ளு)டைய ஆத்து மத்தை இரட்சித்தருளும் சுவாமி.

சுவாமி!  தேவரீர் நோவேயை ஜலப் பிரளயத் திலே நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் ஆபிரகாமென்பவரை ஊரென்கிற பட்டணத்தின் அஞ்ஞானத்திலே நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி!  தேவரீர் ஈசாக்கென்பவரைத் தன் தகப்பன் கையால் பலியாகிறதிலே நின்று இரட் சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி!  தேவரீர் யோபென்பவரை தரித்திரத் திலும், துன்பத்திலும் நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி!  தேவரீர் சோதோமென்கிற பட்ட ணத்திலும், அந்தப் பட்டணத்தைச் சுட்டெரித்த அக்கினியிலும் நின்று லோத்தென்பவரை இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் எஜிப்து தேசத்தின் இராஜ னான பாரவோனிடத்தினின்று மோயீசனை இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் தாவீதென்கிறவரை கோலி யாத் என்கிற இராட்சதன் கையிலும் சவுல் என்கிற இராயன் கையிலும் நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் தானியேல் என்பவரைச் சிங்கங்களின் கெபியிலே நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் இரக்கமற்ற நபூக்கோதனசார் கையிலும், அவன் சூளைத் தீயிலும் நின்று மூன்று இளைஞரை இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் சூசான்னா என்கிற புண்ணிய வதியை அவதூறிலே நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! தேவரீர் அர்ச். இராயப்பரையும் சின்னப்பரையும் சிறைக் கூடத்திலும் விலங்கிலும் நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சுவாமி! கன்னியாஸ்திரீயும் வேதசாட்சியு மாகிய தேக்கிளாவென்பவளை மகா நிஷ்டூர ஆக்கினைகளிலே நின்று இரட்சித்தது போல, இவனு(ளு)டைய ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய அடியானாகிய இவனாத்துமத்தையும் இரட்சித்து உமது மோட்ச இராச்சியத்தின் செல்வ பாக்கியங்களுக்கும் நித்தி யானந்த சந்தோஷத்துக்கும் பங்காளியாயிருக்கக் கிருபை செய்தருளும்.

ஆமென்.